August 7, 2018
தண்டோரா குழு
கருணாநிதியின் உடல் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.
திமுக தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவு காரணமாக காவிரி மருத்துவமனையில் கடந்த 11 நாட்களாக சிகிச்சை பெற்று வருகிறார்.இதற்கிடையில்,காவிரி மருத்துவமனை நேற்று வெளியிட்ட அறிக்கையில்,கருணாநிதியின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது,24 மணி நேரம் தீவிர கண்காணிப்பில் இருந்தால் மட்டுமே கூற முடியும் என தெரிவித்திருந்தது.
இந்நிலையில் கருணாநிதியின் உடல்நிலையில் குறித்து 6 வது முறையாக காவிரி மருத்துவமனை நிர்வாகம் தற்போது அறிக்கை வெளியிட்டுள்ளது.அதில்,திமுக தலைவர் கருணாநிதி மிகவும் கவலைக்கிடமாக உள்ளார்.போதிய மருத்துவ சிகிச்சை அளித்தும்,அவரது உடல் உறுப்புகள் செயலிழந்து வருகின்றன என அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.