• Download mobile app
18 May 2025, SundayEdition - 3385
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கருணாநிதி உடலை மெரினாவில் அடக்கம் செய்ய தமிழக அரசு மறுப்பு

August 7, 2018 தண்டோரா குழு

திமுக தலைவர் கருணாநிதி சிகிச்சை பலனின்றி இன்று மாலை 6.10 மணிக்கு காலமானார். அவருடைய மறைவுக்கு பிரதமர்,குடியரசுத் தலைவர் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

திமுக செயல் தலைவர் ஸ்டாலின் மற்றும் அவரது குடும்பத்தினர் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து மெரினாவில் அடக்கம் செய்வதற்கு அனுமதி கேட்டனர்.இந்தக் கோரிக்கையை பரிசீலிப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மு.க.ஸ்டாலினிடம் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில்,கருணாநிதி உடலை மெரினாவில் அடக்கம் செய்வதற்கு தமிழக அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில்,

நீதிமன்றத்தில் வழக்குகள் நிலுவையில் உள்ளதால் மெரினாவில் கருணாநிதி உடலை அடக்கம் செய்ய இடம் ஒதுக்க இயல்வில்லை என்றும்,காமராஜர் நினைவகத்துக்கு அருகே 2 ஏக்கர் நிலம் ஒதுக்க அரசு தயாராக உள்ளது.

முக்கிய பிரமுகர்கள்,பொதுமக்கள் அஞ்சலி செலுத்த ராஜாஜி ஹாலில் கருணாநிதி உடலை வைக்க அனுமதி,கருணாநிதிக்கு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யவும்,அத்தருணத்தில் தேசியக் கொடியை அரைக்கம்பத்தில் பறக்க விடவும்,மேலும் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்வதாகவும் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் எனவும் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க