August 7, 2018
தண்டோரா குழு
திமுக தலைவர் கருணாநிதி மறைவுக்கு இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சே இரங்கல் தெரிவித்துள்ளார்.
தமிழக முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கருணாநிதி உடல்நலக்குறைவு காரணமாக சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் இன்று மாலை 6.10 மணியளவில் காலமானார்.
இதையடுத்து அவரது மறைவிற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.இந்நிலையில்,திமுக தலைவர் கருணாநிதி மறைவுக்கு இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சே இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து ராஜபக்சே தனது டுவிட்டர் பக்கத்தில்,
“தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் மறைவை அறிந்து துயருற்றேன். தமிழ் இலக்கியத்துக்கும் சினிமாவுக்கும் அரசியலுக்கும் அவர் ஆற்றிய பங்களிப்புகள் இணையற்றவை.கலைஞர் அவர்களின் மறைவால் துயருறும் மில்லியன்கணக்கானோரோடு நானும் இணைகிறேன்.அவரது குடும்பத்தினருக்கும் தமிழ்நாட்டு மக்களுக்கும்,எனது ஆழ்ந்த அனுதாபங்கள்” என கூறியுள்ளார்.