• Download mobile app
03 Jul 2025, ThursdayEdition - 3431
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

இனி எப்படி கேட்பேன் அந்த காந்த குரலை கலைஞர் ஐயா – ஹர்பஜன் சிங்

August 7, 2018 தண்டோரா குழு

திமுக தலைவர் கலைஞர் மறைவுக்கு இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் இரங்கல் தெரிவித்துள்ளார்.

தமிழக முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கருணாநிதி உடல்நலக்குறைவு காரணமாக சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் இன்று மாலை காலமானார்.

இதையடுத்து அவரது மறைவிற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.இந்நிலையில் திமுக தலைவர் கலைஞர் மறைவுக்கு இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில்,

“சூரியன் முழுமையாக அஸ்தமித்தது.தமிழ் தன்னுடைய முடிவுரையை எழுதியது.ஒப்பாரும் மிக்காரும் இல்லா தலைவா உங்களுடைய இழப்பு காலத்தால் ஈடு செய்ய முடியாதது.இனி எப்படி கேட்பேன் அந்த காந்த குரலை கலைஞர் ஐயா.முத்தமிழின் மூத்த மகனுக்கு என் வீர வணக்கங்கள்” என பதிவிட்டுள்ளார்.

மேலும் படிக்க