• Download mobile app
02 Feb 2026, MondayEdition - 3645
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இனி எப்படி கேட்பேன் அந்த காந்த குரலை கலைஞர் ஐயா – ஹர்பஜன் சிங்

August 7, 2018 தண்டோரா குழு

திமுக தலைவர் கலைஞர் மறைவுக்கு இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் இரங்கல் தெரிவித்துள்ளார்.

தமிழக முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கருணாநிதி உடல்நலக்குறைவு காரணமாக சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் இன்று மாலை காலமானார்.

இதையடுத்து அவரது மறைவிற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.இந்நிலையில் திமுக தலைவர் கலைஞர் மறைவுக்கு இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில்,

“சூரியன் முழுமையாக அஸ்தமித்தது.தமிழ் தன்னுடைய முடிவுரையை எழுதியது.ஒப்பாரும் மிக்காரும் இல்லா தலைவா உங்களுடைய இழப்பு காலத்தால் ஈடு செய்ய முடியாதது.இனி எப்படி கேட்பேன் அந்த காந்த குரலை கலைஞர் ஐயா.முத்தமிழின் மூத்த மகனுக்கு என் வீர வணக்கங்கள்” என பதிவிட்டுள்ளார்.

மேலும் படிக்க