• Download mobile app
13 Jun 2025, FridayEdition - 3411
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கதறிய படியே கோபாலபுரம் திரும்பிய கலைஞரின் மகள் செல்வி

August 7, 2018 தண்டோரா குழு

திமுக தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவு காரணமாக காவிரி மருத்துவமனையில் கடந்த 11 நாட்களாக சிகிச்சை பெற்று வருகிறார்.காவிரி மருத்துவமனை நேற்று வெளியிட்ட அறிக்கையில், கருணாநிதியின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது என்றும்,24 மணி நேரம் தீவிர கண்காணிப்பில் இருந்தால் மட்டுமே கூற முடியும் என தெரிவித்திருந்தது.இச்செய்தியை அறிந்த திமுக தொண்டர்கள் நேற்று முதல் மருத்துவமனை முன்பு குவியத் தொடங்கினர்.

இதற்கிடையில்,இன்று மாலை கருணாநிதியின் உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளதாக காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.அந்த அறிக்கையில்,சில மணி நேரங்களாக கருணாநிதியின் உடல்நிலையில் குறிப்பிடத்தக்க அளவில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.மேலும், அவரது உடலுறுப்புகளின் செயல்பாடுகள் மோசமாக உள்ளதாகவும்,சீரற்ற நிலையில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.இந்த செய்தியை கேட்டு காவேரி மருத்துவமனை முன் குவிந்துள்ள தொண்டர்கள் கண்ணீர் விட்டு கதறி அழுது வருகின்றனர்.

இந்நிலையில்,காவேரி மருத்துவமனையில் இருந்து கருணாநிதியின் மகள் செல்வி கதறிய படியே கோபாலபுரம் திரும்பியுள்ளார்.அதைபோல் காவேரி மருத்துவமனையில் இருந்து மு.க.தமிழரசு, துர்கா ஸ்டாலின்,குஷ்பு உள்ளிட்டோர் கண்ணீருடன் வெளியேறினர்.

மேலும் படிக்க