• Download mobile app
03 Nov 2025, MondayEdition - 3554
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இந்தியா தனது சிறந்த மகனை இழந்துவிட்டது – ராகுல் காந்தி

August 7, 2018 தண்டோரா குழு

இந்தியா தனது சிறந்த மகனை இழந்துவிட்டது என கருணாநிதி மறைவிற்கு காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் மிக மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரும்,முன்னாள் முதல்வரும்,திமுக தலைவருமான கருணாநிதி உடல் நலக் குறைவால் இன்று காலமானார்.இதையடுத்து அவரது மறைவுக்கு பல்வேறு தலைவர்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில்,கருணாநிதியின் மறைவிற்கு காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில்,

“தமிழ் மக்களால் பெரிதும் நேசிக்கப்பட்ட கலைஞர் தமிழக அரசியல் களத்தை கடந்த 60 ஆண்டுகளாக சூப்பர் ஹீரோ போல ஆக்கிரமித்திருந்தார்.அவரது மறைவு மூலம் இந்தியா தனது சிறந்த மகனை இழந்தது.அவரது மறைவால் வாடும் லட்சக்கணக்கான தொண்டர்களுக்கும் அவரின் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல் எனக் கூறியுள்ளார்.

மேலும் படிக்க