August 11, 2018
தண்டோரா குழு
மெரினாவில் கருணாநிதி நினைவிடத்தில் நடிகர் பிரசாந்த் மற்றும் அவரது தந்தை தியாகராஜன் ஆகியோர் இன்று(ஆகஸ்ட் 11)அஞ்சலி செலுத்தினர்.
தமிழக முன்னாள் முதல்வரும் திமுக தலைருமான கருணாநிதி ஆகஸ்ட் 7ம் தேதி மாலை காவேரி மருத்துவமனையில் காலமானார்.இதைத்தொடர்ந்து ராஜாஜி அரங்கில் முக்கிய தலைவர்கள், பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் கருணாநிதிக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்திய நிலையில்,ஆகஸ்ட் 8ம் தேதி மாலை சுமார் 4 மணியளவில் கருணாநிதி உடல் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு, பின்னர் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இதனையடுத்து கருணாநிதி நினைவிடத்தில் ஏராளமான பொதுமக்கள் மற்றும் கட்சி தொண்டர்கள், முக்கிய பிரபலங்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.இந்நிலையில்,நடிகர் பிரசாந்த் மற்றும் அவரது தந்தையும் நடிகருமான தியாகராஜன் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.