• Download mobile app
18 May 2025, SundayEdition - 3385
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மெரினாவில் கருணாநிதி நினைவிடத்தில் நடிகர் கார்த்தி அஞ்சலி

August 10, 2018 தண்டோரா குழு

சென்னை மெரினாவில் கருணாநிதி நினைவிடத்தில் நடிகர் கார்த்தி மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

தமிழக முன்னாள் முதல்வரும் திமுக தலைருமான கருணாநிதி ஆகஸ்ட் 7ம் தேதி மாலை காவேரி மருத்துவமனையில் காலமானார்.இதைத்தொடர்ந்து ராஜாஜி அரங்கில் முக்கிய தலைவர்கள், பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் கருணாநிதிக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்திய நிலையில்,ஆகஸ்ட் 8ம் தேதி மாலை சுமார் 4 மணியளவில் கருணாநிதி உடல் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு, பின்னர் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இதனையடுத்து தொடர்ந்து 3வது நாளாக இன்றும் காலை முதல் கருணாநிதி நினைவிடத்தில் ஏராளமான பொதுமக்கள் குவிந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில்,சென்னை கோபாலபுரம் இல்லத்துக்கு சென்ற நடிகர் கார்த்தி திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து பேசினார்.பின்னர் மெரினாவில் கருணாநிதி நினைவிடத்திற்கு சென்ற நடிகர் கார்த்தி மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

மேலும் படிக்க