• Download mobile app
23 May 2025, FridayEdition - 3390
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

திமுக பெண் பிரமுகருக்கு அரிவாள் வெட்டு

October 26, 2016 தண்டோரா குழு

சென்னையில் தி.மு.க.வைச் சேர்ந்த பெண் பிரமுகர் அரிவாளால் வெட்டப்பட்டார். இது தொடர்பாக மூன்று பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

தாம்பரம் அருகே சேலையூரில் வசித்துவருபவர் ரேணுகாதேவி ( 37). இவர் பரங்கிமலை ஒன்றிய தி.மு.க. மகளிரணி துணை அமைப்பாளராக உள்ளார். மகளிர் சுய உதவிக் குழுக்களையும் நடத்தி வருகிறார்.

செவ்வாய்க்கிழமை காலையில் தனது மகளை பள்ளிக் கூடத்தில் விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த இவரிடம் மூன்று பேர் ஏதோ ஒரு முகவரியைக் கேட்டுள்ளனர். அதற்குப் பதிலளித்துக் கொண்டிருந்தபோது, அவர்கள் ரேணுகா தேவியின் தாடையில் வெட்டிவிட்டு மோட்டார் சைக்கிளில் விரைந்து சென்று விட்டனர்.பலத்த காயமடைந்த ரேணுகாதேவியை அருகில் இருந்தவர்கள் மீட்டு கிழக்கு தாம்பரத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அந்த மூன்று மர்ம இளைஞர்களை தேடி வருகின்றனர். பட்டபகலில் ஒரு பெண்ணை மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டிய சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க