• Download mobile app
13 Sep 2025, SaturdayEdition - 3503
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

திமுகவும்,ஜனசங்கமும்தான்,காங்கிரஸ் ஆதிக்கத்தை எதிர்த்தன – நிதின் கட்கரி

August 30, 2018 தண்டோரா குழு

திமுகவும்,ஜனசங்கமும் தான்,காங்கிரஸ் ஆதிக்கத்தை எதிர்த்தன என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார்.

திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் தலைமையில் சென்னை ஒய்எம்சிஏ மைதானத்தில் கலைஞரின் புகழுக்கு வணக்கம் என்ற தலைப்பில் நினைவேந்தல் கூட்டம் நடைபெறுகிறது.

கருணாநிதி புகழஞ்சலி கூட்டத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத்,சீதாராம் யெச்சூரி, முன்னாள் பிரதமர் தேவகவுடா,காஸ்மீர் முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லா,மத்திய அமைச்சர் நிதின் கட்கரி உள்ளிட்டோர் பங்கேற்று புகழ் அஞ்சலி செலுத்தினர்.

இந்நிகழ்வில் பேசிய மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பேசுகையில்,

“கருணாநிதியை தமிழக தலைவராக மட்டும் பார்க்க வேண்டாம்,அவர் தேசிய தலைவர். தமிழகத்திற்கு மட்டுமல்ல,இந்திய ஜனநாயகத்திற்கு கருணாநிதி பங்களித்தார்.திமுகவும், ஜனசங்கமும் தான்,காங்கிரஸ் ஆதிக்கத்தை எதிர்த்தன.எமெர்ஜென்சியை இணைந்து எதிர்த்ததும் இவ்விரு கட்சிகள் தான்.கருணாநிதிக்காக நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்தி வைக்கப்பட்டன.இரு அவைகளிலும் உறுப்பினராக இருந்திராத கருணாநிதிக்காக அவை ஒத்தி வைக்கப்பட்டது சரித்திர நிகழ்வு”.இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் படிக்க