• Download mobile app
19 Jun 2025, ThursdayEdition - 3417
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

வடசென்னை படத்தின் இயக்குனர் வெற்றி மாறன் மீது வழக்கறிஞர் போலீசில் புகார்

October 22, 2018 தண்டோரா குழு

வடசென்னை திரைப்படத்தின் இயக்குநர் வெற்றிமாறன் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் கடந்த 17ம் தேதி வெளியான படம் வடசென்னை.இப்படம் வசூல் ரீதியிலும் ரசிகர்கள் மத்திலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.இப்படத்தில் இடம்பெற்ற சில வசனங்களுக்காக இப்படத்திற்கு தணிக்கைகுழு ‘ஏ’ சான்றிதழ் வழங்கி இருந்தது.

இந்நிலையில்,சமூகநீதிக்கான வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவரான சார்லஸ் அலெக்சாண்டர் இயக்குநர் வெற்றிமாறன் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.அம்மனுவில்,வடசென்னை திரைப்படம் ஏ சான்றிதழ் பெற்றிருந்தாலும் 18 வயதுக்கும் மேற்பட்டவர்கள் முகம் சுழிக்கும் வகையில் உள்ளது.

சமூக அக்கறை இல்லாமல் பார்வையாளர்களின் மனதை புண்படுத்தி,காயப்படுத்தும் வகையில் இயக்குனர் வெற்றிமாறனால் வசனங்கள் எழுதப்பட்டுள்ளது மிகவும் கண்டிக்கத்தக்கது.ஆகையால் சமூகத்தை சீரழிக்கும் வகையில் அமைந்துள்ள இந்த திரைப்படத்தை இயக்கிய வெற்றிமாறன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.மேலும்,நடவடிக்கை எடுக்கப்பட்டால் தான்,சமூகத்தை சீரழிக்கும் விதமான திரைப்படங்கள் இனிமேல் வெளிவராது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து,இப்புகாரைப் பெற்றுக் கொண்ட உளவுத்துறை துணை ஆணையர் விமலா,இது குறித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததாக சார்லஸ் அலெக்சாண்டர் செய்தியாளர்களிடம் கூறினார்.

மேலும் படிக்க