• Download mobile app
13 Sep 2025, SaturdayEdition - 3503
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பொம்மை துப்பாக்கிகளுடன் திராவிடர் தமிழர் கட்சியினர் மனு

September 3, 2018 தண்டோரா குழு

தலித் மக்களுக்கு பாதுகாப்பு இல்லாத காரணத்தால் துப்பாக்கி வைத்துக் கொள்ள அனுமதிக்க கோரி பொம்மை துப்பாக்கிகளுடன் இன்று திராவிடர் தமிழர் கட்சியினர் மனு அளிக்க வந்தனர்.

மக்கள் குறை தீர்ப்பு நாளான இன்று கோவை ஆட்சியர் அலுவலகத்தில் பல்வேறு கோரிக்கைகளுக்கு தீர்வு கோரி மனு அளித்தனர்.தலித்துகளுக்கு பாதுகாப்பு இல்லை எனவும்,கோவையில் அருந்ததியர் மக்களுக்கு எதிராக தீண்டாமை கொடுமைகள் நடைபெற்று வருவதாகவும்,தீண்டாமை கொலைகள் தற்கொலைகளாகவும்,விபத்து மரணங்களாக மாற்றம் செய்யப்படுவதாக குற்றம் சாட்டினர்.

மேலும்,திராவிடர் தமிழர் கட்சியனர் தலித் மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு எஸ்.சி-எஸ்.டி 1989 சட்டத்தின்படி துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் வைத்து கொள்ள உரிமங்களுக்கு பரிந்துரை செய்யகோரி பொம்மை துப்பாக்கிகளுடன் வந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

மேலும் படிக்க