• Download mobile app
19 May 2025, MondayEdition - 3386
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பொம்மை துப்பாக்கிகளுடன் திராவிடர் தமிழர் கட்சியினர் மனு

September 3, 2018 தண்டோரா குழு

தலித் மக்களுக்கு பாதுகாப்பு இல்லாத காரணத்தால் துப்பாக்கி வைத்துக் கொள்ள அனுமதிக்க கோரி பொம்மை துப்பாக்கிகளுடன் இன்று திராவிடர் தமிழர் கட்சியினர் மனு அளிக்க வந்தனர்.

மக்கள் குறை தீர்ப்பு நாளான இன்று கோவை ஆட்சியர் அலுவலகத்தில் பல்வேறு கோரிக்கைகளுக்கு தீர்வு கோரி மனு அளித்தனர்.தலித்துகளுக்கு பாதுகாப்பு இல்லை எனவும்,கோவையில் அருந்ததியர் மக்களுக்கு எதிராக தீண்டாமை கொடுமைகள் நடைபெற்று வருவதாகவும்,தீண்டாமை கொலைகள் தற்கொலைகளாகவும்,விபத்து மரணங்களாக மாற்றம் செய்யப்படுவதாக குற்றம் சாட்டினர்.

மேலும்,திராவிடர் தமிழர் கட்சியனர் தலித் மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு எஸ்.சி-எஸ்.டி 1989 சட்டத்தின்படி துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் வைத்து கொள்ள உரிமங்களுக்கு பரிந்துரை செய்யகோரி பொம்மை துப்பாக்கிகளுடன் வந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

மேலும் படிக்க