December 1, 2018
தண்டோரா குழு
டெல்லியில் நடைபெறும் விவசாயிகள் போராட்டத்தில் பல்வேறு மாநில விவசாயிகளும் கலந்து கொண்டுள்ள நிலையில்,தமிழக விவசாயிகள் தமிழர்களின் மானத்தை வாங்கும் வகையில் கொச்சையாக நடந்து கொள்கிறார்கள் என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
“டெல்லியில் நடைபெறும் விவசாயிகள் போராட்டத்தில் பல்வேறு மாநில விவசாயிகளும் கலந்து கொண்டுள்ள நிலையில்,தமிழக விவசாயிகள் தமிழர்களின் மானத்தை வாங்கும் வகையில் கொச்சையாக நடந்து கொள்கிறார்கள்.போராட்டம் சரியா தவறா என்பதை தாண்டி,தமிழக விவசாயிகளின் வழிமுறை சரியா என்று பார்க்க வேண்டும்.அவர்களின் செயலால் தமிழர்களை அவமானப்படுத்தியுள்ளார்கள்.மற்ற மாநில விவசாயிகளுக்கு தன்மானம் உள்ளது.தமிழக விவசாயிகள் தன்மானம் இழந்து நிற்கிறார்களா ? இவர்கள் தமிழகத்தை காட்டிக்கொடுக்கிறார்களா ?? இந்த விவசாயிகளுக்கு இங்குள்ள சில அரசியல் கட்சி பைனான்ஸ் செய்கிறார்கள்.இந்த அரசியல் கட்சிகளின் துணையோடு தான் அவர்கள் போராட்டம் நடத்துகிறார்கள்.அனைத்து கட்சியினரும் இந்த செயல்களை கண்டிக்க வேண்டும்.நாம் தமிழர் கட்சியின் சீமான் அரசியல் பேசட்டும்,சமுதாயம் பற்றி பேசட்டும்.ஆன்மீகத்தில் அவர்களுக்கு நம்பிக்கை இல்லை என்றால் விட்டு விடலாம். கேவலமான வார்த்தைகளை பேசுவது யோக்கியதை அற்ற நிலையில் இருப்பதை காட்டுகிறது.மேகதாது விஷயத்தில் அணை கட்டுவது ஏற்றுக்கொள்ள முடியாது. அந்த சூழ்நிலை வராது.கஜா புயல் பாதிப்பு குறித்து நேற்றைக்கு உள்துறை இணையமைச்சரிடம் பேசியுள்ளேன்.விரைவில் நிவாரணம் கிடைக்கும்.நாட்டில் வேலைவாய்ப்பின்மை உள்ளது என்று ராகுல் காந்தி கூறியது குறித்து கேள்வி எழுப்பியதற்கு,காங்கிரஸ் கட்சிகாரர்களுக்கு தான் வேலைவாய்ப்பின்மை உள்ளது. முதலில் அவர்கள் அதைப்பற்றி பேசட்டும் என்றார்”.இவ்வாறு பேசினார்.