• Download mobile app
19 May 2025, MondayEdition - 3386
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தொடர் மழைக்காரணமாக கோவை குற்றாலத்திற்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல தடை

August 11, 2018 தண்டோரா குழு

கனமழை காரணமாக கோவை குற்றாலத்திற்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல நான்காவது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

கோவை குற்றாலம் நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக கோவை குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

தமிழக மற்றும் கேரளா மாநிலத்தில் கடந்த 1 மாத காலமாக பரவலாக மழை பெய்து வருகிறது.
கடந்த சில நாட்களாக கேரளாவில் பெய்து வரும் கனமழையால் அம்மாநிலமானது வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.மேலும்,தென்மேற்கு பருவமழை காரணமாகவும் சிறுவாணி அணைக்கு தண்ணீர் வரத்து அதிகம் காணப்படுகிறது.இதனால் சிறுவாணி அணையானது நிரம்பி வழிந்து வருவதனால் கோவை குற்றாலத்தில் நீர் வீழ்ச்சி அதிகமாக காணப்படுகிறது.

இதன் காரணமாக இன்று நான்காவது நாளாக கோவை குற்றலாத்தில் சுற்றலா பயணிகள் செல்ல வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். மேலும்,மழை குறைந்ததும் சுற்றலா பயணிகள் செல்ல அறிவுறுத்தப்படும் என்று வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க