• Download mobile app
14 Sep 2025, SundayEdition - 3504
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் ரயில்வே சுரங்கப்பாதை திறக்க கோரி பள்ளி மாணவர்கள் போராட்டம்

October 16, 2018 தண்டோரா குழு

கோவையில் ரயில்வே சுரங்கப்பாதையை விரைந்து திறக்கக்கோரி பள்ளி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து இன்று தர்ணாவில் ஈடுபட்டனர்.

கோவை இருகூர் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே ரயில்வே பாதை உள்ளதாகவும்,இந்த ரயில்வே பாதையில் நாள்தோறும் 30க்கும் மேற்பட்ட ரயில்கள் சென்று வரும் நிலையில்,இந்த ரயில்வே பாதையை கடந்து தான் இருகூர் அரசுப்பள்ளிக்கு மாணவர்கள் சென்று வருவதாக தெரிவித்தனர்.அவ்வப்போது,ஏற்படும் விபத்துகளால் உயிரிழப்பு ஏற்படுவதாகவும்,கடந்த 3ஆண்டுகளுக்கு முன்பு நான்கு மாணவர்கள் உயிரிழந்துள்ளதாக கூறும் மாணவர்கள்,இதனை தடுக்க கடந்த 3ஆண்டுகளுக்கு முன் ரூ.3கோடி மதிப்பில் சுரங்கப்பாதை பணிகள் துவங்கப்பட்டு இன்னும் முடியாமல் உள்ளதால் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தனர்.

மேலும்,ரயில்வே பணி முடிந்த நிலையில் நெடுஞ்சாலை பணிகள் தாமதத்தினால்,சுரங்கப்பாதை பணிகள் முடிவடையாமல் உள்ளதாகவும்,இதனால் அச்சத்துடனே ரயில்வே பாதையை கடந்து சென்று வருவதாகவும்,இல்லயென்றால் சுமார் 3கி.மீ., தொலைவிற்கு சுற்றி வர வேண்டிய நிலை உள்ளதாக கூறுகின்றனர்.இந்த போராட்டத்தில் 500க்கும் மேற்பட்டோர் பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர்.இதனையடுத்து தகவலறிந்து வந்த காவல்துறையினர்,நெடுஞ்சாலை துறை அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தைக்கு அழைத்து செல்வதாக கூறியதையடுத்து பள்ளி மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

மேலும் படிக்க