• Download mobile app
19 May 2025, MondayEdition - 3386
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

உலக முதலுதவி தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி

September 8, 2018 தண்டோரா குழு

கோவையில் ரோட்டரி கிளப் சார்பாக உலக முதலுதவி தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி லஷ்மி மில் சிக்னல் அருகே இன்று நடைபெற்றது.

இந்தியாவில் விபத்துகளால் இறப்பவர்களில் 80 சதவீதம் பேர்,மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது முதல் ஒரு மணி நேரத்தில் பலியாகின்றனர் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.இந்நிலையில் முதலுதவி அளித்தாலே 50 சதவிகிதத்திற்கும் மேலாக விபத்தில் பாதிக்கப்பட்ட நபர்களை காப்பாற்ற முடியும்.நம்மில் பல பேருக்கு முதலுதவி அளிப்பது குறித்து சரியாக தெரியாததாலே பல உயிர்களை காப்பாற்ற முடியாமல் போகின்றது.

இதனையடுத்து அனைவரும் முதலுதவி அளிக்க முறையான பயிற்சியை மேற்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தி ரோட்டரி சங்கத்தின் சார்பாக போக்குவரத்து துறை துணை ஆணையாளர் சுஜித்குமார் தலைமையில்,விழிப்புணர்வு நோட்டீஸ் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு லஷ்மி மில்ஸ் சிக்னல் அருகே வழங்கப்பட்டது.மேலும்,குழந்தைகளுக்கு முதலுதவி குறித்த பயிற்சியை பள்ளிகளில் இருந்தே கற்றுக்கொடுக்க முன் வர வேண்டும் என்றுக் கூறினார்.

மேலும் படிக்க