September 8, 2018
தண்டோரா குழு
கோவையில் ரோட்டரி கிளப் சார்பாக உலக முதலுதவி தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி லஷ்மி மில் சிக்னல் அருகே இன்று நடைபெற்றது.
இந்தியாவில் விபத்துகளால் இறப்பவர்களில் 80 சதவீதம் பேர்,மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது முதல் ஒரு மணி நேரத்தில் பலியாகின்றனர் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.இந்நிலையில் முதலுதவி அளித்தாலே 50 சதவிகிதத்திற்கும் மேலாக விபத்தில் பாதிக்கப்பட்ட நபர்களை காப்பாற்ற முடியும்.நம்மில் பல பேருக்கு முதலுதவி அளிப்பது குறித்து சரியாக தெரியாததாலே பல உயிர்களை காப்பாற்ற முடியாமல் போகின்றது.
இதனையடுத்து அனைவரும் முதலுதவி அளிக்க முறையான பயிற்சியை மேற்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தி ரோட்டரி சங்கத்தின் சார்பாக போக்குவரத்து துறை துணை ஆணையாளர் சுஜித்குமார் தலைமையில்,விழிப்புணர்வு நோட்டீஸ் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு லஷ்மி மில்ஸ் சிக்னல் அருகே வழங்கப்பட்டது.மேலும்,குழந்தைகளுக்கு முதலுதவி குறித்த பயிற்சியை பள்ளிகளில் இருந்தே கற்றுக்கொடுக்க முன் வர வேண்டும் என்றுக் கூறினார்.