• Download mobile app
13 Jun 2025, FridayEdition - 3411
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஐக்கிய நாடுகளின் தூதுவராக கோவையை சேர்ந்த பெண் நியமனம்

August 7, 2018 தண்டோரா குழு

ஜமைக்கா நாட்டில் நடந்த அலங்கார போட்டியில் இந்திய அளவில் போட்டியிட்ட கோவையை சேர்ந்த திருமதி ரிதிஷா ஐக்கிய நாடுகளின் தூதுவராகவும்,ஐக்கிய நாடுகள் தெற்காசியா விருதுகளையும் வென்றிருக்கிறார்.

கோவை சாய்பாபா காலனி ஆர்எம்பி குடும்பத்தைச் சேர்ந்த தொழில் அதிபர் திருமதி தேவிகா ரமேஷ் அவர்களின் மகள் ரிதிஷா நிவேதா.உள் அலங்கார வடிவமைப்பாளராக இருக்கும் இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர்.

சமூகப்பணியில் ஆர்வம் அதிகமாக இருந்த இவருக்கு இந்திய நாட்டின் கலாச்சாரத்தையும் பாரம்பரியத்தையும் எடுத்துச் சொல்வதற்கான ஒரு வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்து இருக்கிறார் இயக்குனர் ரேஷ்மா ஸ்ரீ ஜாய்.

உலக நாடுகளில் இருந்து 220க்கும் மேற்பட்ட அழகிகள் கலந்து கொண்ட இந்தப் போட்டி ஜமைக்கா நாட்டிலுள்ள கிங்ஸ்டன் நகரில் கடந்த ஜூலை மாதம் 21ம் தேதி முதல் 28ம் தேதி வரை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் ஆஸ்திரேலியா,கொரியா,தாய்லாந்து,பெலாரஸ் போன்ற நாடுகளிலிருந்தும் அழகிகள் கலந்து கொண்டனர்.

அவர்களிடம் என்னுடைய சமூகப்பணியைப் பற்றி திருமதி ஜமைக்கா,மற்றும் திருமதி அமெரிக்கா என தேர்வு செய்யப்பட்டவர்களுடன் பகிர்ந்து கொண்டேன்.அவர்களும் அதை ஆமோதித்து நான் தங்கியிருந்த விடுதியில் அருகிலிருந்த பள்ளிகளுக்கு சென்று நூறு குழந்தைகளுக்கு தங்களது விருப்பத்திற்கேற்ப உணவு சமைத்து பரிமாறவும் முடிவு செய்தோம்.

அதில்,இந்திய நாட்டின் பெருமையை சேர்க்கும் வகையில் நான் பிரியாணியை ஆவலுடன் செய்து அனைவருக்கும் பரிமாறினேன்.அனைத்து குழந்தைகளும் விரும்பி சாப்பிட்டனர்.அதுமட்டுமின்றி பள்ளி சுவற்றில் வர்ணம் அடித்து ஓவியம் வரைந்து அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கினோம்.

பின்னர் போட்டிகளில் கலந்து கொண்டு தெற்காசியா எனும் பட்டத்தை எனக்கு தேர்ந்தெடுத்த பின்பு ஒரு வருடகாலம் சமூகப் பணியில் ஈடுபட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தனர்.

சமூகப்பணியில் ஆர்வம் மிகுதியாக இருந்த எனக்கு இது ஒரு வரப்பிரசாதமாக அமைந்தது.அப்போது கோவையில் நிலா ஃபவுண்டேஷன் பற்றியும் மலைவாழ் மக்களுக்கு நான் செய்துவரும் பணிகள் பற்றியும் அவர்களது வாழ்க்கை மேம்பட வருவாய் ஈட்டுவது பற்றியும் விளக்கினேன்.

ஒவ்வொரு சுற்றாக வெற்றி பெற்ற நிலையில் இறுதி சுற்றுக்கு 20 பெண்கள் தேர்வு செய்யப்பட்டனர்.இதில் இறுதியாக எனக்கு ஐ.நா அம்பாசிடர் 2018 மற்றும் தெற்காசிய விருதுக்கு தேர்வு செய்தனர்.

பின்னர்,இதே விருதை இரண்டாம் இடத்தில் தாய்லாந்து ஜமைக்கா மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள் பெற்றனர்.இந்த விருது பெற்றவர்கள் ஐநாசபையுடன் சேர்ந்து ஓராண்டிற்கு சமூக பணியாற்ற வேண்டும்.

நான் எனது நிலா பவுண்டேஷன் மூலம் இந்த பணியை மேற்கொள்ள விரும்புகிறேன்.மேலும்,நமது நாட்டில் குழந்தைகள் தவறாக கையாளப்படுகின்றனர் அதைத் தவிர்க்கும் விதமாக அனைவரையும் ஒன்று திரட்டி செயல்படுவேன் குற்றங்களுக்கு எதிராக குரல் கொடுக்க பாடுபடுவேன் என்றார்.

மேலும் படிக்க