• Download mobile app
19 May 2025, MondayEdition - 3386
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

அரசு பணிமனை முன்பு போக்குவரத்து ஊழியர் தீக்குளிக்க முயற்சி

September 6, 2018 தண்டோரா குழு

வால்பாறையில் இருந்து கோவைக்கு இடமாற்றம் செய்ததைக் கண்டித்து கோவையில் உள்ள அரசு போக்குவரத்து பணிமனை முன்பு,போக்குவரத்து ஊழியர் தீக்குளிக்கும் முயற்சியில் ஈடுபட்டார்.

வால்பாறை பகுதியை சேர்ந்த அரசு போக்குவரத்து ஓட்டுனரான வேல்முருகன் என்பவர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஏற்பட்ட வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்டுள்ளார்.அப்போது வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதாகக் கூறி அதிகாரிகள், இவரை கோவைக்கு இடமாற்றம் செய்து உள்ளனர்.இது குறித்து அதிகாரிகளிடம் பல முறை புகார் அளித்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில் கோவை மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள அரசு போக்குவரத்து பணிமனை முன்பு வேல்முருகன் தீக்குளிக்கும் முயற்சியில் ஈடுபட்டார்.உடல் முழுவதும் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டார். பிறகு உடனடியாக அவரை போக்குவரத்து அதிகாரிகள் அழைத்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். சம்பவம் தொடர்பாக காவல் துறையினரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க