• Download mobile app
05 Jul 2025, SaturdayEdition - 3433
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை SNS கல்லூரி நிர்வாக இயக்குனர் மீது பாலியல் புகார்

September 20, 2018 தண்டோரா குழு

கோவை SNS கல்லூரி நிர்வாக இயக்குனர் சுப்பிரமணியன்(64) என்பவர் அங்கு பணியாற்றும் பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக புகார் எழுந்த நிலையில் அது தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை அடுத்த சரவணம்பட்டியில் எஸ்.என்.எஸ்.கல்வி நிறுவனம் உள்ளது.இக்கல்லூரியின் நிர்வாக இயக்குனர் சுப்ரமணியம்(64) இவரது அலுவலகத்தில் பணிபுரியும் பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்ததாக சொல்லப்படுகிறது.இதையடுத்து அப்பெண்,கல்லூரி நிர்வாக இயக்குனர் சுப்ரமணியம் தன்னிடம் அத்துமீறி நடந்து கொள்வதை செல்போன் கேமரா மூலம் ரகசியமாக படம் எடுத்துள்ளார்.

இதுசம்பந்தமாக பாதிக்கப்பட்ட பெண் கல்லூரி தலைமை நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும் இதுவரை சம்பந்தப்பட்ட அதிகாரி மீது கல்லூரி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்நிலையில்,அப்பெண் கோவை துடியலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பாலியல் தொந்தரவு கொடுத்த நிர்வாக இயக்குனர் சுப்ரமணியம் மீது நடவடிக்கை எடுக்குமாறும் தனக்கு பாதுகாப்பு வழங்குமாறும் புகார் அளித்துள்ளார்.இதையடுத்து இது குறித்து வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில் இன்று அந்த புகாரை அந்த பெண் வாபஸ் பெற்றுள்ளார்.

மேலும் படிக்க