• Download mobile app
04 Nov 2025, TuesdayEdition - 3555
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை செல்வபுரத்தில் அரசுப்பேருந்து மோதி பள்ளி மாணவன் பலி

October 16, 2018 தண்டோரா குழு

கோவை செல்வபுரம் அருகே அரசு பேருந்து மோதியதில்,பள்ளி சிறுவன் சம்பவ இடத்திலேயே பலியானது அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

செண்டரிங் வேலை செய்து வரும் உதயராஜின் மகன் சுபாஷ்(8).இவர் செல்வபுரம் சிவாலயா திரையரங்கம் அருகே உள்ள அரசு பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வருகிறார்.இந்நிலையில் நேற்று சிறுவன் வழக்கம் போல பள்ளி முடித்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்த போது அதிவேகமாக வந்த அரசு பேருந்து எல்.ஐ.சி காலனி அருகே சிறுவன் மீது மோதியது.இதில் பலத்த காயம் அடைந்த சிறுவனை அருகே இருந்தவர்கள் கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர்.ஆனால் சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து செல்வபுரம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.மேலும் சிறுவனின் பிரேதத்தை கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைத்துள்ளனர்.பள்ளிச்சிறுவன் மீது அரசுப் பேருந்து மோதி பலியான சம்பவம் செல்வபுரம் பகுதியில் உள்ள பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க