• Download mobile app
19 Jun 2026, FridayEdition - 3782
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் கொலை வழக்கு தொடர்பாக என்ஐஏ மீண்டும் விசாரணை

August 30, 2018 தண்டோரா குழு

இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் கொலை வழக்கை தேசிய புலனாய்வு முகமை(என்.ஐ.எ) அதிகாரிகள் கடந்த 7 மாதமாக விசாரித்து வந்த நிலையில் இன்று கோவை சாய்பாபா காலனி பகுதியில் ஹசன் என்பவருடைய பூட்டி இருந்த வீட்டில் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

கோவையில்  கடந்த 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இந்து முன்னணி பிரமுகர் சசிக்குமார்  சுப்பிரமணியபாளையம் பகுதியில் மரம் நபர்களால் படுகொலை செய்யப்பட்டார்.இது தொடர்பாக 8 தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.ஆனால் கொலையாளி தொடர்பாக எந்த துப்பும் கிடைக்காததையடுத்து செப்டம்பர் 27ம் தேதி இவ்வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.

இதில் இவ்வழக்கில் கோவை சாய்பா பாகலனி பகுதியை சேர்ந்த சதாம் உசேன் மற்றும் முபாரக்  ஆகியோருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது.மேலும் இவர்களை கண்டுபிடித்து தருபவர்களுக்கு ரூபாய் 2 லட்சம் சன்மானம் வழங்கப்படும் எனவும் காவல்துறை சார்பாக அறிவிக்கப்பட்டது. 

இவ்வழக்கு தொடர்பாக அபுதாகிர்,சதாம் என்பவர் கைது செய்யப்பட்டு நிபந்தனை ஜாமினில் உள்ளனர்.மேலும் முக்கிய குற்றவாளிகளாக கருதப்பட்ட முபாரக்,சபையர் ஆகியோர் சட்ட விரோத செயல்கள் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் உள்ளனர்.

இதில் கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணைகள் மேற்கொண்டதின் அடிப்படையில்,இந்த கொலை வழக்கின் பின்னணியில் பல்வேறு தடை செய்யப்பட்ட இயக்கங்களுக்கு தொடர்பு இருக்கலாம் என சந்தேகம் எழுந்தது.இதனையடுத்து இவ்வழக்கினை தேசிய புலனாய்வு முகமைக்கு கடந்த பிப்ரவரி முதல் தேதியில் மாற்றப்பட்டது.

கடந்த 7 மாதங்களாக தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் இன்று கொச்சியில் உள்ள என்.ஐ.ஏ அலுவலகத்தில் இருந்து எஸ்.பி தலைமையிலான அதிகாரிகள் குழு இன்று கோவை வந்தனர்.இவர்கள் சசிக்குமார் கொலை வழக்கு தொடர்பாக கோவை மாநகர காவல்துறையினர் உதவியுடன் சாய்பாபா காலனி பகுதியில் உள்ள முன்னா என்பவருடைய பூட்டியிருந்த வீட்டில் சோதனை நடத்தி வருகின்றனர்.

ஹசன் தனது மனைவி மற்றும் பெற்றோர் ஷாஜகானுடன் வசித்து வந்துள்ளார்.ஹசன் குடும்பத்துடன் துபாயில் உள்ள தனது சகோதரி வீட்டில் உள்ளதாகவும்,அவரது பெற்றோர் சென்னையில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும் ஹசனின் தந்தைக்கு சொந்தமான துடியலூர் பகுதியில் உள்ள மரக்கடையிலும் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை செய்துள்ளனர்.சசிக்குமார் கொலை வழக்கு தொடர்பாக வெளிநாட்டில் உள்ள முன்னாவை அழைத்திருந்தாகவும்,ஆனால் வெளிநாட்டில் உள்ளதால் முன்னா வர மறுத்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் முன்னா மற்றும் அவரது குடும்பத்தினர் கோவையில் கடந்த மூன்று மாதங்களாக இல்லாததால் இன்று திடீரென பூட்டி இருந்த வீட்டில் என்.ஐ.ஏ அதிகாரிகள் அதிரடியாக சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் படிக்க