• Download mobile app
19 May 2025, MondayEdition - 3386
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை தமிழ்நாடு காவலர் அருங்காட்சியகத்திற்கு “2018 தொழில் சிறப்பு விருது”

September 6, 2018 தண்டோரா குழு

கோவை தமிழ்நாடு காவலர் அருங்காட்சியகத்திற்கு ரோட்டரி கிளப் சார்பாக “2018 தொழில் சிறப்பு விருது” வழங்கப்பட்டது.

கோவையில் தமிழ்நாடு காவலர் அருங்காட்சியகம் நாட்டின் தனித்துவம் வாய்ந்த அருங்காட்சியகமாகும்.இது 1918 ல் உருவாக்கப்பட்ட “ஹேமில்டன் காவலர் கூட்டுறவு விடுதி சங்கத்தை” மாற்றியமைத்து 2016 ஆம் ஆண்டில் கோவை காவலர் அருங்காட்சியகமாக உருவெடுத்தது.

இந்த அருங்காட்சியகத்தில் ஆயுதங்கள்,விருதுகள்,பதக்கங்கள்,கைப்பற்ற பட்ட ஆயுதங்கள்,காவலர்களின் பதவிகளை அறியும் விதமாக காவலர் சீருடைகள் வெடிகுண்டுகளை கண்டுபிடிக்க பயன்படும் உபகரணங்கள்.மேலும் பல வகையான ஆயுதங்களும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக முன்னாள் முதல்வர் MGR அவர்களுக்கு அப்போதய ரோட்டரி கிளப் கவர்னர் வரதராஜ் வழங்கிய வெள்ளி வாள் இன்றும் பாதுகாப்பாக காட்சிபடுத்தப்பட்டு உள்ளது.இதனை பெருமை படுத்தும் விதமாக ரோட்டரி கிளப்பின் தற்போதைய கவர்னர் பதி மற்றும் தலைவர் சசிகுமார் அவர்கள் இணைந்து “தொழில் சிறப்பு விருதினை” கோவை மாவட்ட போக்குவரத்து இணைஆணையாளர் சுஜித்குமார் IPS.அவர்களிடம் வழங்கினர்.

மேலும் படிக்க