• Download mobile app
01 Nov 2025, SaturdayEdition - 3552
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை தமிழ்நாடு காவலர் அருங்காட்சியகத்திற்கு “2018 தொழில் சிறப்பு விருது”

September 6, 2018 தண்டோரா குழு

கோவை தமிழ்நாடு காவலர் அருங்காட்சியகத்திற்கு ரோட்டரி கிளப் சார்பாக “2018 தொழில் சிறப்பு விருது” வழங்கப்பட்டது.

கோவையில் தமிழ்நாடு காவலர் அருங்காட்சியகம் நாட்டின் தனித்துவம் வாய்ந்த அருங்காட்சியகமாகும்.இது 1918 ல் உருவாக்கப்பட்ட “ஹேமில்டன் காவலர் கூட்டுறவு விடுதி சங்கத்தை” மாற்றியமைத்து 2016 ஆம் ஆண்டில் கோவை காவலர் அருங்காட்சியகமாக உருவெடுத்தது.

இந்த அருங்காட்சியகத்தில் ஆயுதங்கள்,விருதுகள்,பதக்கங்கள்,கைப்பற்ற பட்ட ஆயுதங்கள்,காவலர்களின் பதவிகளை அறியும் விதமாக காவலர் சீருடைகள் வெடிகுண்டுகளை கண்டுபிடிக்க பயன்படும் உபகரணங்கள்.மேலும் பல வகையான ஆயுதங்களும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக முன்னாள் முதல்வர் MGR அவர்களுக்கு அப்போதய ரோட்டரி கிளப் கவர்னர் வரதராஜ் வழங்கிய வெள்ளி வாள் இன்றும் பாதுகாப்பாக காட்சிபடுத்தப்பட்டு உள்ளது.இதனை பெருமை படுத்தும் விதமாக ரோட்டரி கிளப்பின் தற்போதைய கவர்னர் பதி மற்றும் தலைவர் சசிகுமார் அவர்கள் இணைந்து “தொழில் சிறப்பு விருதினை” கோவை மாவட்ட போக்குவரத்து இணைஆணையாளர் சுஜித்குமார் IPS.அவர்களிடம் வழங்கினர்.

மேலும் படிக்க