• Download mobile app
18 Jun 2025, WednesdayEdition - 3416
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

குடிசைமாற்று விவகாரம்:கால அவகாசம் கேட்டு கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு

November 28, 2018 தண்டோரா குழு

கோவைமாவட்டம் இருகூர் பேரூராட்சிக் குஉட்பட்ட நொய்யல் காலணியில் வசித்து வரும் மக்களை தங்கள் வீடுகளை காலிசெய்யுமாறும்,அங்குள்ள குடிசை வீடுகளை அப்புறபடுத்த போவதாகவும் தமிழ்நாடு குடிசைமாற்றுவாரியம் மற்றும் பொதுப்பணித்துறையிடமிருந்து கடந்த27/11/2018 அன்று அறிவிப்புவந்தது.

அந்த அறிவிப்பில் நொய்யல் ஆற்றுப்புறம் போக்கு நிலத்தில் தாங்கள் ஆக்கிரமிப்பு செய்து வீடு கட்டி வசித்து வருவதாகவும் தமிழ்நாடு ஏரிகளை பாதுகாத்தல் மற்றும் ஆக்கிரமிப்பை அகற்றுதல் சட்டம் 2007ன் கீழ் அறிவிப்பு கிடைத்த இருபத்தொரு நாட்களுக்குள் வெளியேறவேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

ஏரி,குளம் போன்ற நீர்நிலைகளில் குடியிருப்பவர்களுக்கு மாற்று ஏற்பாடு செய்து தரவேண்டுமென ஏற்கெனவே உச்சநீதிமன்றம் கூறியிருந்தது. அதனடிப்படையில் கோவையில் வாலாங்குளம் உள்ளிட்ட பலபகுதிகளில் குடியிருக்கும் மக்களுக்கு மாற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.அந்த வகையில் தற்போது காமாட்சிபுரம் நொய்யல் காலணி மக்களுக்கும் மாற்று ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.ஆனால் அந்த அறிவிப்பு அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ப்தியை ஏற்படுத்தியுள்ளது.

காரணம் அறிவிப்பின்படி இருபத்தொரு நாட்களுக்குள் காலிசெய்வது தான்.இதனால் காலஅவகாசத்தை ஆறுமாதமாக உயர்த்துமாறு அப்பகுதி மக்கள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு அளித்தனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில்,

“நொய்யல் காலணியில் நூற்றம்பதுக்கும் மேற்பட்ட குடும்பம் வசித்து வருகின்றனர்.பெரும்பாலும் இங்குள்ள மக்கள் சிறுசிறு வேலைகளை செய்து வாழ்ந்து வருகின்றனர்.இங்கு தான் குழந்தைகளுக்கு பள்ளிக்கூடம்,வேலைபார்க்கும் இடம் என அனைத்துக்கும் ஏதுவாக இருந்து வருகிறது.தற்போது நொய்யல் காலணியில் குடியிருந்த மக்களுக்கு சூலூர் அருகே உள்ள செங்கந்துறை புதுநகரத்தில் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளது.அங்கு சென்றால் எங்களால் வேலைக்கு செல்ல முடியாது.குழந்தைகளின் பள்ளிகள் தடையாகும்,சீரான போக்குவரத்து பள்ளிக்கூடம்,கடைகள் போன்ற அடிப்படை வசதிகள் இல்லாததால் அடுக்குமாடி குடியிருப்பில் கால்நடைகளை வைத்துக்கொண்டு இருப்பது சிரமம்.இதனால் எங்கள் வாழ்தாரமேபாதிக்கப்படும்.இதனால் எங்களுக்கு வேறு இடத்தில் மாற்று ஏற்பாடு செய்து தருமாறு கோரிக்கை விடுத்தனர்”.

மேலும் படிக்க