• Download mobile app
06 Jun 2025, FridayEdition - 3404
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு

மது போதையில் காலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நபர் கைது

July 28, 2018 தண்டோரா குழு

கோவை ஆம்னி பேருந்து நிலையத்தில் வாகன தணிக்கையில் போக்குவரத்து காவலர்கள் ஈடுபட்ட போது மது போதையில் காலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கோவை ஆம்னி பேருந்து நிலையம் அருகே நேற்றைய தினம் மதியம் போக்குவரத்து காவலர்கள் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.அப்போது அவ்வழியே வந்த கல்வீரம்பாளையத்தை சேர்ந்த சுதர்ஷன் என்பவர் இருசக்கர வாகனத்தில் அவ்வழியே வந்துள்ளார்.அப்போது அவரை நிறுத்தி சோதனை செய்த போது சுதர்ஷன் மது போதையில் இருந்தது தெரியவந்தது.

அப்போது அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட போது காவலர்களிடம் சுதர்ஷன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.தான் பெரிய ஆளு என்றும் முக்கிய பிரமுகர்களை தெரியும் என்றும் அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டு காவலர்களை ஒரு நேரத்தில் மிரட்டவும் செய்தார்.

இது தொடர்பாக வாகன தணிக்கையில் ஈடுபட்ட போக்குவரத்து காவலர்கள் ரத்தினபுரி காவல் நிலைய காவலர்களுக்கு தகவல் அளித்தனர்.சம்பவ இடத்திற்கு வந்த காவலர்கள் அவரை பிடித்து விசாரணை மேற்கொண்ட போது தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் சுதர்ஷன் மது போதையில் காவலர்களை மிரட்டியது தெரியவந்தது.

இதனையடுத்து தான் செய்தது தவறு என்றும் காவலர்களின் பணி குறித்தும் அவர் வருத்தத்துடன் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வரும் நிலையில்,அரசு அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்தல்,விபத்து ஏற்படுத்தும் விதமாக வாகனத்தை ஒட்டுதல் உள்ளிட்ட நான்கு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர்.

மேலும் முதலில் பொது மக்கள் மத்தியில் வீரமாக பேசிய சுதர்ஷன் வீடியோவும்,தற்போது அப்பாவியாக காவல்துறையினர் குறித்து அவர் பேசும் வீடியோவும் சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

மேலும் படிக்க