• Download mobile app
18 Jun 2025, WednesdayEdition - 3416
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் கலப்பட எண்ணெய் மற்றும் நெய் பறிமுதல்

November 23, 2018 தண்டோரா குழு

கோவையில் பிரபல நிறுவனங்களின் பேரில் தயாரிக்கப்பட்ட 500 லிட்டர் கலப்பட எண்ணெய் மற்றும் நெய்யை கோவை மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

கோவையை அடுத்த கே.கே.புதூர் பகுதியில் எண்ணெய் தயாரிப்பது குடோன் இயங்கி வந்து உள்ளது. இந்நிலையில் இந்த குடோனில் இன்று கோவை மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி விஜயலலிதாம்பிகை தலைமையிலான அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

அப்போது பரிசோதனை செய்து பார்த்ததில் அங்கு தயாரிக்கப்பட்ட எண்ணெய் மற்றும் நெய் முழுவதும் கலப்படம் என தெரிய வந்தது. கடந்த சில மாதங்களாக பிரபல நிறுவனங்கள் பெயரில் எண்ணெய் மற்றும் நெய்யை தயாரித்து வந்தது தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து அங்கு தயாரிக்கப்பட்ட 500 லிட்டர் கலப்பட எண்ணெய் மற்றும் நெய்யை அதிகாரிகள் பறிமுதல் செய்து அந்த குடோனுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

இவர்கள் பல்வேறு பகுதிகளில் கலப்பட எண்ணெய் தயாரித்து வந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து சம்மந்தப்பட்ட உரிமையாளரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இது போன்ற கலப்பட எண்ணெய்யை தயார் செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க