• Download mobile app
20 Jun 2026, SaturdayEdition - 3783
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் நடைபெற்ற என்.ஜி.ஒக்களுக்கான திறன் வளர்ப்பு கருத்தரங்கம்

May 12, 2018 தண்டோரா குழு

கோவை ஹெச்.சி.எல் நிறுவன அறக்கட்டளை சார்பில் பெரு நிருவனங்களின் சமூக பொறுப்புணர்வை திறம்பட மேம்படுத்தும் என்.ஜி.ஒ திறன் வளர்ப்பு கருத்தரங்கம் நேற்று நடைப்பெற்றது.

இந்த கருத்தரங்கில் ஹெச்.சி.எல் அறக்கட்டளை சார்பாக சுகாதாரம்,சுற்றுச் சுழல், கல்வி வாழ்வாதாரம் குறித்து நடத்தப்பட்ட பல்வேறு அமர்வுகளில் என்.ஜி.ஒ.,க்களுக்கு உள்ள அனுபவங்கள் மற்றும் சவால்கள் பகிர்ந்து கொள்ளப்பட்டன.தற்போது கிராமப்புற வளர்ச்சியில் கவனம் செலுத்தும் விதமாக சுகாதாரம்,சுற்றுச் சுழல்,கல்வி ஆகிய துறைகளில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளது.

இதுகுறித்து ஹெச்.சி.எல் அறக்கட்டளை இயக்குநர் நிதி புண்டிர் கூறுகையில்,

“எங்கள் அமைப்பு சார்பில் அகில இந்திய அளவில் தொடர்ச்சியாக நடைப்பெறும் ஆறாவது நிகழ்வாகும்.இந்த கருத்தரங்கு மூலம் நாம் தொலைதூர கிராமப்புற இடங்களில் பணியாற்றும் எண்ணற்ற தொண்டு நிறுவனங்கள் மற்றும் அவர்களின் தொலைநோக்கு திட்டங்களை விரைந்து செயலாற்ற உதவும்” என்றார்.

இந்நிலையில்,பின்தங்கிய நிலையில் உள்ள கிராமங்களில் சமூக பொருளாதார வளர்ச்சிக்கு பணியாற்றும் அரசு சாரா நிறுவனத்தை தேர்வு செய்து அவற்றுக்கு விருது வழங்க ஹெச்.சி.எல் அறக்கட்டளை முடிவு செய்துள்ளது.

மேலும்,இதற்காக தேர்ந்தெடுக்கப்படவுள்ள என்.ஜி.ஒ.,க்கள் சிறந்த நீதிபதி குழுவால் வெளிப்படையான நடவடடிக்கைகள் மூலம் தேர்வு செய்யப்படவுள்ளன.இதற்கான விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் பதிவு செய்ய வேண்டும்.

மேலும் படிக்க