• Download mobile app
18 May 2025, SundayEdition - 3385
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் நீராபானம் விற்பனையை தொடங்கிய தென்னை விவசாயிகள்

July 31, 2018 தண்டோரா குழு

கோவை மாவட்டத்தில் 10 தென்னை உற்பத்தியாளர் கூட்டமைப்புகள்,65 தென்னை உற்பத்தியாளர் சங்கங்கள்,2159 தென்னை விவசாயிகளும்,1500 நபர்கள் பங்குதாரர்களாக உள்ள விநாயகா தென்னை உற்பத்தியாளர் நிறுவனத்தின் மூலம் நீராபானம் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் விற்பனை செய்யப்பட்டது.

நீரா பானம் தென்னம் பாளைகளிலிருந்து வடித்தெடுக்கப்படும் இளம் பழுப்பு நிறமுள்ள தித்திப்பான தாவரச்சாறு ஆகும்.இதில் அதிகளவு இரும்புச்சத்தும்,பாஸ்பரஸ் மற்றும் அஸ்கார்பிக் அமிலம் அடங்கியுள்ளதால் இருதய நோய்,சிறுநீரக கல் அடைப்பு,கல்லீரல்,ஆஸ்துமா,இரத்த சோகை போன்ற நோய்களை குணப்படுத்தக்கூடியது.

நீரா பானம் மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்களான நீரா க்ரிஸ்டல் சுகர்,நீரா ஹனி,நீரா பால்கோவா, தேங்காய் பர்ப்பி போன்ற பொருட்கள் உயர்தரமான முறையில் தயாரிக்கப்பட்டு தற்போது விற்பனை செய்யப்படுகிறது.நீரா பானத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருபது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க