July 31, 2018
தண்டோரா குழு
கோவை மாவட்டத்தில் 10 தென்னை உற்பத்தியாளர் கூட்டமைப்புகள்,65 தென்னை உற்பத்தியாளர் சங்கங்கள்,2159 தென்னை விவசாயிகளும்,1500 நபர்கள் பங்குதாரர்களாக உள்ள விநாயகா தென்னை உற்பத்தியாளர் நிறுவனத்தின் மூலம் நீராபானம் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் விற்பனை செய்யப்பட்டது.
நீரா பானம் தென்னம் பாளைகளிலிருந்து வடித்தெடுக்கப்படும் இளம் பழுப்பு நிறமுள்ள தித்திப்பான தாவரச்சாறு ஆகும்.இதில் அதிகளவு இரும்புச்சத்தும்,பாஸ்பரஸ் மற்றும் அஸ்கார்பிக் அமிலம் அடங்கியுள்ளதால் இருதய நோய்,சிறுநீரக கல் அடைப்பு,கல்லீரல்,ஆஸ்துமா,இரத்த சோகை போன்ற நோய்களை குணப்படுத்தக்கூடியது.
நீரா பானம் மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்களான நீரா க்ரிஸ்டல் சுகர்,நீரா ஹனி,நீரா பால்கோவா, தேங்காய் பர்ப்பி போன்ற பொருட்கள் உயர்தரமான முறையில் தயாரிக்கப்பட்டு தற்போது விற்பனை செய்யப்படுகிறது.நீரா பானத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருபது குறிப்பிடத்தக்கது.