• Download mobile app
19 Jun 2026, FridayEdition - 3782
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் லாரிகள் வேலை நிறுத்தத்தால் காய்கறி விலை வீழ்ச்சி

July 27, 2018 தண்டோரா குழு

லாரிகள் வேலைநிறுத்தம் காரணமாக பிற மாவட்டங்களில் காய்கறி விலை உயர்ந்துள்ள நிலையில், கோவையில் போதுமான அளவு இருப்பு வைக்கப்பட்டு உள்ளதால் காய்கறிகளின் விலை குறைந்து உள்ளது.

கோவை மாவட்ட சுற்றுப்புற கிராமங்களில்,காய்கறிப் பயிர்கள் நன்கு விளைச்சலை கொடுத்து வருகின்றன.உருளைக்கிழங்கு,பெரிய வெங்காயத்திற்கு மற்ற மாநிலங்களை நம்பியே கோவை இருக்கிறது.

கோவையில் விளையும் காய்கறிகள்,கேரளாவுக்கு அன்றாடம் விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகிறது.லாரிகளின் வேலை நிறுத்தம் காரணமாக கடந்த ஐந்து நாட்களாக காய்கறிகள் கேரளாவுக்கு கொண்டு செல்லப்படுவதில்லை.

மேலும்,கோவை சுற்றுப்புற கிராமங்களில் விளையும் காய்கறிகள்,சிறிய ஆட்டோ,டெம்போக்களில் மார்க்கெட்டுக்கு எளிதாக வந்து சேர்க்கிறது.இதனால் கோவையில் உள்ள எம்.ஜி.ஆர் மார்க்கெட், அண்ணா மார்கெட்,ராஜவீதி டி.கே மார்க்கெட் ஆகிய பகுதிகளில் ஏராளமான காய்கறிகள் டிப்பர் லாரிகளில் இருப்பு வைக்கப்பட்டு உள்ளது.

இருப்பில் உள்ள காய்கறிகளை வந்த விலைக்கு விற்பனை செய்யும் முடிவுக்கு காய்கறி வியாபாரிகள் தள்ளப்பட்டு உள்ளனர்.இதனால் காய்கறி விலை கடந்த வாரத்தை விட வீழ்ச்சி அடைந்துள்ளது. குறிப்பாக கடந்த வாரம் 30 ரூபாய்க்கு,விற்கப்பட்ட ஆப்பிள் தக்காளி தற்போது 15 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.30 ரூபாயாக இருந்த அவரைக்காய் 15 ரூபாய்க்கும்,20 ரூபாயாக இருந்த சுரக்காய், 10க்கும் விற்கப்படுகிறது.இதேபோல பல காய்கறிகளின் விலையும் குறைந்து உள்ளது. மேலும் காய்கறிகளை வாங்க ஆளில்லாமல் அழுகு வீணாகும் நிலை உள்ளதாகவும் வியாபாரிகள் தெரிவித்து உள்ளனர்.

மேலும் படிக்க