August 10, 2018
தண்டோரா குழு
குனியமுத்தூர் பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை முயற்சி செய்து கொண்டதில் மனைவி பலியானார்.இதில் கணவன் மற்றும் இரண்டு குழந்தைகளுக்கு கோவை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
குனியமுத்தூர் ககாமராஜர் வீதி அய்யப்பன் நகரை சேர்ந்தவர் ஜானகிராமன்(45).இவரது மனைவி சசிகலா(36).இவர்களின் குழந்தைகள் சினேகா (17)மற்றும் பிரேமவர்ணா(13).இவர்கள் நேற்று இரவு விஷம் அருந்தி மயங்கிய நிலையில் வீட்டில் இருந்துள்ளனர்.
இந்நிலையில்,அவர்களை மீட்ட அக்கம்பக்கத்தினர் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.இதில் இவர்களுக்கு நேற்று இரவு முதல் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.பின்னர் மேல் சிகிச்சைக்காக முதலில் மனைவி சசிகலாவை கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். ஆனால் சசிகலா சிகிச்சை பலனின்றி சில மணி நேரத்திலேயே உயிரிழந்தார்.
பின்னர் மற்ற மூன்று பேரையும் கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்ய முயன்றது கோவை மக்களை சோகத்தில் ஏற்படுத்தியுள்ளது.இச்சம்பவம் குறித்து குனியமுத்தூர் போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.