• Download mobile app
05 May 2026, TuesdayEdition - 3737
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை குற்றாலம் அருவிக்கு செல்ல தடை

August 9, 2018 தண்டோரா குழு

கோவை குற்றாலம் நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.இதனால் சுற்றுலாப் பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

கோவை குற்றாலம் நீர் பிடிப்பு பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக பலத்த மழை பெய்து வருவதால் கோவை குற்றால அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.மேலும் பலத்த காற்றும் வீசுவதால் மரங்கள் முறிந்து விழக்கூடும் சூழலும் உருவாகி உள்ளது.இதன் காரணமாக சுற்றுலாப் பயணிகள் கோவை குற்றாலம் செல்ல தடைவிதித்து வனத்துறை உத்தரவிட்டுள்ளது.

தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்த காரணத்தால் கடந்த ஒரு மாதங்களாக கோவை குற்றாலம் மூடப்பட்டிருந்தது.கடந்த நான்கு நாட்களாக திறக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது மீண்டும் மூடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க