September 5, 2018
தண்டோரா குழு
ஆசிரியர் தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் கொண்டாட்டங்கள் களைகட்டி உள்ள சூழலில்,கோவை மாவட்டத்தில் உள்ள கே.ஜி.மருத்துவமனையில் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் ஏராளமான மருத்துவர்கள்,செவிலியர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் கே.ஜி மருத்துவமனைத் தலைவர் பக்தவச்சலம் கலந்துக் கொண்டு பேசினார்.அப்போது பேசிய அவர்,”ஆசிரியர்கள் ஒவ்வொருவரின் வாழ்விலும் தனி பங்கை விகிப்பதாகவும்,எனவே அனைவரும் அவர்களின் அறப்பணியை மறவாமல் அவர்களுக்கு நன்றி கடனாக எப்பொழுதும் இருக்க வேண்டும் எனக் கூறினார்.மேலும் ஆசிரியரை போற்றி வருடந்தோறும் அவர்களுக்காக தனி நேரம் ஒதுக்கி அவர்களிடம் நேரத்தை கழிக்க வேண்டும்”.இவ்வாறு பேசினார்.