• Download mobile app
05 May 2026, TuesdayEdition - 3737
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சுதந்திரதினத்தை முன்னிட்டு கோவையில் மஜக சார்பில் இரத்ததான முகாம்

August 15, 2018 தண்டோரா குழு

சுதந்திரதினத்தை முன்னிட்டு மனிதநேய ஜனநாயக கட்சி கோவை மாநகர் மாவட்டத்தின் சார்பில் இரத்ததான முகாம் இன்று நடைபெற்றது.

இந்திய நாட்டின் 72வது சுதந்திரதின விழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கோவை அரசு மருத்துவமனையுடன் இணைந்து மனிதநேய ஜனநாயக கட்சி கோவை மாநகர் மாவட்டத்தின் சார்பில் இரத்ததான முகாம் நடைபெற்றது.

மஜக மருத்துவ அணி மாவட்ட செயலாளர் அபு தலைமையில் நடைபெற்ற இம்முகாமை துணை பொதுச்செயலாளர் சுல்தான்அமீர் தொடங்கி வைத்தார்.மருத்துவ அணி மாவட்ட துணை செயலாளர் செய்யது இப்ராஹிம், வரவேற்புரையாற்றினார்.

இந்நிகழ்ச்சியில் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்களும்,இளைஞர்களும் தங்களது ரத்தத்தை அரசு மருத்துவமனைக்கு தானமாக வழங்கினர்.இதையடுத்து,ரத்த தானம் வழங்கிய அனைவருக்கும் அவர்களின் இரத்ததான சேவையை பாராட்டி சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

மேலும் படிக்க