• Download mobile app
20 May 2025, TuesdayEdition - 3387
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கனமழையால் வீடுகளுக்குள் வெள்ளம்: சாலையில் மறியலில் மக்கள்

September 26, 2018 தண்டோரா குழு

கோவை கணபதி அருகே நேற்று மாலை பெய்த கனமழையில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் கணபதி சங்கனூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று முன் தினம் மற்றும் நேற்று மாலை கனமழை பெய்தது.இதன் ஒரு பகுதியாக கணபதி அடுத்த காமராஜபுரம் பகுதியில் பெய்த கனமழையால் அங்குள்ள நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளில் மழைநீர் புகுந்தது.இதனால் வீடு முழுவதும் சேறும் சகதியுமாக காட்சியளித்த நிலையில் மாநகராட்சி நிர்வாகத்துக்கு அப்பகுதி பொதுமக்கள் தகவல் அளித்துள்ளனர்.ஆனால் மாநகராட்சி அதிகாரிகள் அங்கு வந்து பார்க்காமலும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமலும் இருந்ததையடுத்து ஆத்திரமடைந்த பொதுமக்கள் இன்று காலை கணபதி சங்கனூர் சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது திடீரென சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.இதையடுத்து அங்கு விரைந்த காவல்துறையினர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வீடுகளுக்குள் புகுந்து வெள்ளத்தை அப்புறப்படுத்த மாநகராட்சி அதிகாரிகளிடம் பரிந்துரைத்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.சாலை மறியல் காரணமாக கணபதி சங்கனூர் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் படிக்க