• Download mobile app
20 May 2025, TuesdayEdition - 3387
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை அரசு கலைக்கல்லூரியில் மாணவர்கள் போராட்டம்

September 18, 2018 தண்டோரா குழு

கோவை அரசு கலைக்கல்லூரி விடுதியில் அடிப்படை வசதிகளை செய்து தராத நிர்வாகத்தை கண்டித்து மாணவர்கள் நுழைவு வாயிலில் அமர்ந்து இன்று போராட்டம் நடத்தினர்.

கோவை அரசு கலைக்கல்லூரியில் நான்காயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.பெரும்பாலான மாணவர்கள் மற்ற மாவட்டங்களில் இருந்து விடுதியில் தங்கி படித்து,பகுதி நேர வேலை பார்த்து வருகின்றனர்.அரசு கலைக்கல்லூரி சார்பாக பந்தய சாலையில் செயல்பட்டு வரும் மாணவர்கள் விடுதியில் 500 க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர்.

இந்நிலையில் விடுதியில் தரமற்ற உணவு மற்றும் கழிவறை வசதிகள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளதாகக் கூறி,இரண்டு மாதத்திற்கு முன்பு கல்லூரி முதல்வரிடம் புகராளித்துள்ளதாக தெரிகிறது.மேலும் விடுதி வார்டன் இரு மாணவர்களை தாக்கியதாகவும் புகார் தெரிவித்துள்ளனர்.இப்பிரச்சனைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்காமல் அரசு கலைக்கல்லூரி முதல்வர் காலம் தாழ்த்தி வருவதாகக் கூறி நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்லூரி நூழைவாயிலில் அமர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க