• Download mobile app
19 May 2025, MondayEdition - 3386
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் எலி காய்ச்சல் அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்ட ஒருவர் பலி

September 7, 2018 தண்டோரா குழு

கேரளாவில் எலிக்காய்ச்சல் பாதிப்பால் பலரும் பாதிக்கப்பட்டு வரும் சூழலில்,கேரளாவை ஒட்டியுள்ள கோவை மாவட்டத்தில் எலிகாய்ச்சல் பாதிப்பிற்கு தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.கோவை மாவட்டத்தை பொறுத்த கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முன்னெச்சரிக்கை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.குறிப்பாக கேரளாவில் இருந்து காய்ச்சல் பாதிப்பால் வருபவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

மேலும் எலிக் காய்ச்சல் பாதிப்பு எவ்வாறு பரவுகிறது மற்றும் அதன் அறிகுறிகள் என்னென்ன என்பது குறித்தும்,விழிப்புணர்வு எற்படுத்தப்பட்டு வருகிறது.காய்ச்சல், கண் எரிச்சல் இதுபோன்ற சாதாரண காய்ச்சலுக்கான அறிகுறிகளே இந்த காய்ச்சலுக்கும் இருப்பதால் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டால் சுய மருத்துவம் மேற்கொள்ளாமல் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தி உள்ளனர்.

இந்நிலையில்,கோவை அரசு மருத்துவமனையில் எலிக்காய்ச்சல் அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்ட கிணத்துக்கடவு கொண்டப்பட்டிகை பகுதியை சேர்ந்த சதீஷ்குமார் (29) என்பவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.

மேலும் படிக்க