• Download mobile app
20 Jun 2026, SaturdayEdition - 3783
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

உழவர் சந்தையில் விவசாயிகள் கடை அமைக்க அனுமதி மறுக்கப்படுவதை கண்டித்து விவசாயிகள் போராட்டம்

May 14, 2018 தண்டோரா குழு

கோவை ஆர்.எஸ்.புரம் உழவர் சந்தையில் விவசாயிகள் கடை அமைக்க அனுமதி மறுக்கப்படுவதை கண்டித்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் காய்கறிகள் விற்கும் நூதன போராட்டத்தை இன்று நடத்தினர்.

இந்த போராட்டத்தின் போது ஆர்.எஸ்.புரம் உழவர் சந்தையில் விவசாயிகள் கடை அமைத்து விற்பனை செய்ய அதிகாரிகள் அனுமதி மறுப்பதாகவும்,அங்கிருந்த பல விவசாயிகளை அதிகாரிகள் வெளியேற்றி இருப்பதாகவும் விவசாயிகள் தெரிவித்தனர்.மேலும் உழவர் சந்தையில் விவசாயிகள் விளைப்பொருட்களை விற்பனை செய்ய அனுமதியளிக்க வேண்டுமெனவும்,விவசாயிகளை வெளியேற்றிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் வலியுறுத்திய விவசாயிகள், இல்லையெனில் ஆட்சியர் அலுவலகம் முன்பு நிரந்தரமாக காய்கறிகள் கடை அமைத்து விற்பனை செய்ய அனுமதியளிக்க வேண்டும் என தெரிவித்தனர்.

மேலும் படிக்க