October 20, 2018
கோவையை அடுத்த ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள ஶ்ரீ அன்னபூர்னேஷ்வரி யோக நரசிம்மர் கோயிலில் இன்று தசரா பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.இங்கு நவராத்திரி பண்டிகையின் துவக்கம் முதல், தொடர்ந்து ஒன்பது நாட்களுக்கு தினமும் வழிபாடுகள் நடத்தப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறும்.
இந்நிலையில் நவராத்திரி விழாவின் இறுதி நாளை முன்னிட்டு ஆர்.எஸ்.புரம் பகுதியில் தசரா திரு வீதி உலா நடைபெற்றது.இந்த ஊர்வலத்தில் தமிழ்நாடு,கேரளா,கர்நாடகா,ஆந்திரா உள்ளிட்ட ஆறு மாநிலங்களின் பாரம்பரிய கலைகள் மற்றும் நடனங்கள் இடம்பெற்று இருந்தன.குறிப்பாக பல்வேறு கடவுள்களின் வேடமணிந்து இந்த ஊர்வலத்தில் பக்தர்கள் கலந்து கொண்டனர்.இந்த ஊர்வலத்தில்நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.