• Download mobile app
01 Sep 2026, TuesdayEdition - 3856
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாநகராட்சி மொபைல் ஆப் அறிமுகம்

September 21, 2016 தண்டோரா குழு

கோவை மாநகராட்சியில் ஆன்லைன் மூலம் இணையதளத்தில் பதிவு செய்யபட்டுள்ள விவரங்களை பொதுமக்கள் தொலைபேசியில் பதிவிறக்கம் செய்யும் திட்டம் அறிமுகபடுத்தப்பட்டுள்ளது.

கோவை மாநகராட்சியில் இணையதளம் மூலம் பொதுமக்களின் குறைகள், மாநகராட்சியின் செய்தி, பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள், வரிகள் சம்மந்தபட்ட விவரங்ககளை இணையதளம் மூலம் அறிமுகம் செய்து கொள்ளும் வசதி ஏற்கனவே பயன்பாட்டில் இருந்து வருகிறது.

இந்தநிலையில், மேற்கண்ட விவரங்களை பொதுமக்கள் எளிதில் அறிந்து கொள்ளும் விதமாக புதிதாக மாநகராட்சி சார்பில் மொபைல் ஆப் இன்று அறிமுகபடுத்தபட்டது. இந்த Appஐ பதிவிறக்கம் செய்து பொதுமக்கள் தங்கள் மொபைலில் தங்களுக்கு தேவையான தகவல்களை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

இத்திட்டத்தை நகராட்சி, நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சி சிறப்பு திட்டங்கள் செயலாக்கதுறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி இன்று தொடங்கி வைத்தார்.

“CMCC“ எனப்படும் இந்த மொபைல் Appன் அண்ட்ராய்டு செயல்பாடு வாரவார இறுதியிலும், IOS செயல்பாடு மாத இறுதியிலும் செயல்பாட்டிற்கு வரவுள்ளது.

மேலும் படிக்க