• Download mobile app
19 May 2025, MondayEdition - 3386
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை மாநகர ஆணையாளரிடம் முன்னாள் மேயர் மனு

September 3, 2018 தண்டோரா குழு

சாலைகளை சீரமைக்க கோரி கோவை மாநகர ஆணையாளரிடம் முன்னாள் மேயர் இன்று மனு அளித்தார்.

கோவையை அடுத்த சாய்பாபாகாலனி,கணபதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பல ஆண்டுகளுக்கு முன்னர் போடப்பட்ட சாலைகள் சேதமடைந்ததாக கூறப்படுகிறது.குறிப்பாக பாதாள சாக்கடை,குடிநீர் குழாய் இணைப்புகள் உள்ளிட்ட பணிகளுக்காக சாலைகள் தோண்டப்பட்டதன் காரணமாக,முற்றிலும் சேதமடைந்து உள்ளதால் வாகன ஓட்டிகள் அவதிப்படுவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்த சாலைகளை சீரமைக்க கோரி காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கோவை மாநகரின் முன்னாள் மேயரான காலனி வெங்கடாச்சலம் என்பவர் கோவை மாநகர ஆணையாளரிடம் புகார் மனு அளித்தார்.இந்த சாலைகளை பயன்படுத்தும் மக்கள் தினமும் அவதிப்படுவதாகவும்,வாகன ஓட்டிகளும் நடந்து செல்பவர்களும் கீழே விழும் நிலை ஏற்படுவதால் உடனடியாக சாலைகளை செப்பனிட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.

மேலும் படிக்க