• Download mobile app
03 Aug 2026, MondayEdition - 3827
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ. மீது பாஜகவினர் புகார் மனு

September 6, 2018 தண்டோரா குழு

காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ. நீரஜ் பாரதி மீது,பாஜக அகில இந்திய இளைஞரணி துணை தலைவர் சார்பில் கோவை மாநகர காவல்துறை ஆணையாளரிடம் புகார் அளிக்கப்பட்டது.

கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு கடந்த 2ஆம் தேதி காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ. நீரஜ் பாரதி தனது பேஸ்புக் பக்கத்தில் பெண்களையும்,இறைவன் கிருஷ்ணனையும் அவதூறாக சித்தரிக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளதாகவும்,இதனால் இந்துக்களின் நம்பிக்கை அவதூறு ஏற்படுத்தியதுடன்,நாட்டில் உள்ள பெண்களையும் கொச்சைப்படுத்தியுள்ளதாகவும் கூறி இந்த புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் நீரஜ் பாரதிக்கு எதிராக பாஜகவினர் புகார் மனு அளித்து வருகின்றனர். நீரஜ் பாரதி ஹிமாச்சல் பிரதேசம் கங்க்ரா மாவட்டத்தில் உள்ள ஜாவல் தொகுதியிலிருந்து காங்கிரஸ் சார்பாக எம்.எல்.ஏ.வாகவும்,முதன்மை நாடாளுமன்ற செயலாளராகவும் இருந்தவர்.இந்த புகார் மனுவை சைபர் கிரைம் காவல் துறையினருக்கு அனுப்பி வைத்து விசாரிக்கப்படும் என மாநகர காவல்துறை ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க