• Download mobile app
29 Dec 2025, MondayEdition - 3610
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தூய்மை இந்தியா திட்டம் குறித்து மாற்றுத்திறனாளி விழிப்புணர்வு பயணம்

September 24, 2018 தண்டோரா குழு

சாலை பாதுகாப்பு மற்றும் தூய்மை இந்தியா திட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கோவையில் மாற்றுத்திறனாளி ஒருவர் விழிப்புணர்வு பயணத்தை துவங்கியுள்ளார்.

கோவை குனியமுத்தூர் பகுதியை சேர்ந்த பிரின்ஸ் மாற்றுத்திறனாளியான இவர்,அரசு மருந்தகத்தில் மருந்தாளுநராக பணியாற்றி வருகிறார்.இந்நிலையில் சாலை பாதுகாப்பையும்,தூய்மை இந்தியா திட்டம் குறித்த விழிப்புணர்வு கார் பயணத்தை துவங்கியுள்ளார்.கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் துவங்கிய இப்பயணம் தமிழகம் முழுவதும் 42 நகரங்கள் வழியாக ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் செல்ல உள்ளதாகவும்,10 நாட்களில் மீண்டும் கோவையில் நிறைவு பெற உள்ளதாகவும் தெரிவித்தார்.விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தனி நபராக இப்பயணம் மேற்கொள்ள உள்ளதகாவும் அவர் தெரிவித்தார்.மாற்றுதிறனாளியான பிரின்ஸ் காரை இயக்க,எக்ஸ்லெட்டரை கையால் இயக்கும் வகையில் வடிவமைத்துள்ளார்.

மேலும் படிக்க