• Download mobile app
02 Feb 2026, MondayEdition - 3645
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் அதிவேகமாக வந்த சொகுசு கார் மோதியதில் சாலையோரம் நின்றிருந்த 7பேர் உயிரிழப்பு

August 1, 2018 தண்டோரா குழு

கோவையிலிருந்து பொள்ளாச்சி நோக்கி சென்ற கார் தனது கட்டுப்பாட்டை இழந்து எதிரே நின்று கொண்டு இருந்த ஆட்டோ மீது மோதி,பேருந்துக்காக காத்திருந்த பயணிகள் மீது மோதியதில் ஏழு பேர் பலி உயிரிழந்தனர்.

கோவை பொள்ளாச்சி சாலையிலுள்ள சுந்தராபுரம் ஐயர் மருத்துவமனை அருகே அதிவேகமாக ஆடி கார் ஒன்று வந்துள்ளது.அப்போது ஒட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் எதிரே நின்று கொண்டு இருந்த ஆட்டோ மீது மோதி பேருந்துக்காக காத்திருந்த பொதுமக்கள் 10 பேர் மீது மோதியது.இதில் 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இதனையடுத்து படுகாயமடைந்தவர்களுக்கு அருகிலுள்ள மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையில்,விபத்துக்குள்ளான இந்த கார் கோவை ஈச்சனாரியிலுள்ள ரத்தினம் கல்லூரியின் உரிமையாளரின் கார் எனத் தெரிய வந்துள்ளது.காரை ஓட்டி வந்த ஜெகதீஷ் மயக்கம் ஏற்பட்டு கார் தனது கட்டுப்பாட்டை இழந்ததாக கூறியுள்ளார்.இந்நிலையில்,கார் ஓட்டுனரை பிடித்த பொதுமக்கள் தர்ம அடி கொடுத்ததில் காயமைடந்த அவருக்கு அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இந்த விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க