• Download mobile app
19 Mar 2026, ThursdayEdition - 3690
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிக்கு செப்.,24 வரைநீதிமன்ற காவல்

September 11, 2018 தண்டோரா குழு

கோவை குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிக்கு செப்.,24 வரை நீதிமன்ற காவல் வழங்கி நீதிமன்றம் உத்திரவிட்டுள்ளது.

கோவையில் 1998.,பிப்.,14 ம் தேதி,பல்வேறு இடங்களில் நடந்த பயங்கர குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக 58 பேர் கொல்லப்பட்டனர் 250க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.இந்த தொடர் குண்டுவெடிப்பு தொடர்பாக கேரள மாநிலம்,கோழிக்கோடு,பண்ணியங்காரா கிராமத்தை சேர்ந்த என்.பி.அலி என்பவரின் மகன் நூகு என்ற ரஷீத் என்பவர்,கடந்த 20 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து வந்தார்.இதனையடுத்து நீதிமன்றத்தால் அவர் தலைமறைவு குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார்.

இந்நிலையில்,ரகசிய தகவல் அடிப்படையில்,கோழிக்கோட்டில் இருந்த நூகுவை சிறப்பு புலனாய்வு போலீசார் கைது செய்தனர்.கைது செய்யப்பட்ட நூகுவை கோவை 5வது குற்றவியல் நீதிமன்றத்தில் இன்று ஆஜர் படுத்தப்பட்டார்.இதையடுத்து,20 ஆண்டுகளுக்கு பிறகு கைதான நூகுவை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க கோவை 5ஆவது குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும் படிக்க