• Download mobile app
06 Aug 2026, ThursdayEdition - 3830
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் பிரபாகரன் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடிய த.பெ.தி.க அமைப்பினர்

November 26, 2018 தண்டோரா குழு

விடுதலை புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் பிறந்தநாளை முன்னிட்டு,கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் பட்டாசு வெடித்தும்,கேக் வெட்டியும் கொண்டாடினர்.

தமிழீழ விடுதலை புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது.அதன் ஒரு பகுதியாக கோவை காந்திபுரம் பெரியார் படிப்பகத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் பிரபாகரன் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.பட்டாசு வெடித்தும்,கேக் வெட்டியும் கொண்டாடிய அவ்வமைப்பினர், பிரபாகரனை வாழ்த்தியும்,தமிழீழம் மலரும் எனவும் முழக்கங்களை எழுப்பினர்.

இதைதொடர்ந்து பொதுமக்களுக்கு கேக்குகளை வழங்கினர்.விடுதலை புலிகளுக்கும்,தமிழீழத்திற்கும் தொடர்ந்து ஆதரவு அளிப்போம் எனவும்,விரைவில் தமிழீழம் மலரும் எனவும் தபெதிகவினர் தெரிவித்தனர்.

மேலும் படிக்க