• Download mobile app
03 Nov 2025, MondayEdition - 3554
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு பெண்கள் மற்றும் தாய்மார்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கம்

August 1, 2018 தண்டோரா குழு

உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு கோவையில் கர்ப்பிணி பெண்கள் மற்றும் தாய்மார்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.

உலக தாய்ப்பால் வார விழா ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் 7-ம் தேதி வரை கடைபிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு கோவை,சூலூர் பகுதியில் உள்ள கே.எம்.சி.எச்.மருத்துவமனையில் கர்ப்பிணி பெண்கள் மற்றும் தாய்மார்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.

இந்த கருத்தரங்கை மருத்துவமனை துணை தலைவர் தவமணி பழனிசாமி துவக்கி வைத்து பேசினார்.இதில் குழந்தைகளுக்கு பாலூட்டும் தாய்மார்கள் நல்ல ஆரோக்கியமான உணவுடன் நல்ல மனநிலையை உருவாக்கி கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

மேலும்,இக்கருத்தரங்கில் பேசிய மகப்பேறு மருத்துவர்கள்,தாய்பால் கொடுப்பதினால் ஏற்படும் நன்மைகளையும்,குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதன் அவசியத்தையும் எடுத்து கூறினார்.இக்கருத்தரங்கில் 100 க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துக் கொண்டனர்.

மேலும் படிக்க