• Download mobile app
05 Jul 2025, SaturdayEdition - 3433
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

அரவிந்த் மருத்துவமனையில் நர்சிங் பயின்று வரும் மாணவி தூக்கிட்டு தற்கொலை

September 18, 2018 தண்டோரா குழு

கோவை அரவிந்த் மருத்துவமனையில் நர்சிங் பயின்று வரும் மாணவி மாலினி நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார்.

உடுமலைபேட்டையை சேர்ந்தவர் மணிகண்டன் சைலஜா தம்பதியினர் இவர்களது மகள் மாலினி கோவை அவினாசி சாலையில் உள்ள அரவிந்த் கண் மருத்துவமனையில் மூன்றாமாண்டு நர்சிங் பயிற்சி பெற்று வருகிறார்.மருத்துவமனை விடுதியில் தங்கியிருந்த மாலினி ஒன்பதாம் எண் கொண்ட தனது அறையில் நேற்று மாலை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.இதனையடுத்து மாலினியின் உடலை கைப்பற்றி பீளமேடு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில்,மாலினியின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக பெண்ணின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் புகார் அளித்துள்ளனர்.

மேலும்,இறந்த மாலினியின் உடலை காண காவல்துறையினர் இதுவரை அனுமதிக்கவில்லை என குற்றம்சாட்டிய உறவினர்கள் மருத்துவமனை நிர்வாகம் மாலினி இறப்பு குறித்தும் சரிவர பெற்றோரிடம் தெரிவிக்காமல் அவசரம் அவசரமாக உடலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்துவிட்டதாக தெரிவிக்கின்றனர்.

கோவைக்கு பயிற்சி பெற இரண்டு மாதத்திற்கு முன்னர் வந்த மாலினி,நன்கு படிக்க கூடிய மாணவியாகவும், தைரியமான பெண்ணாக இருந்ததாகவும் தெரிவிக்கும் உறவினர்கள் பீளமேடு காவல்துறையினர் புகாரை அவர்கள் விருப்பத்திற்கு மாற்றி எழுதுவதாகவும் குற்றம் சாட்டுகின்றனர்.

மேலும் படிக்க