• Download mobile app
19 Jun 2026, FridayEdition - 3782
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

காவல் துறை அதிகாரிகள் மீது மனித உரிமை ஆணையத்திடம் புகார் – நடிகை ஸ்ருதி

August 3, 2018 தண்டோரா குழு

விசாரணையின் போது காவல் துறை அதிகாரிகள் பாலியல் ரீதியாக துன்புறுத்தியது தொடர்பாக மனித உரிமை ஆணையம்,மகளிர் ஆணையம் ஆகியவற்றில் புகார் அளித்துள்ளதாக நடிகை ஸ்ருதி தெரிவித்துள்ளார்.

கோவையில் இளைஞர்களை திருமணம் செய்து கொள்வதாக கூறி மோசடி செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகை ஸ்ருதி,நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.இந்நிலையில் 3வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜராகி கையெழுத்திட்ட பின்பு,செய்தியாளர்களுக்கு ஸ்ருதி பேட்டியளித்தார்.

அப்போது பேசிய அவர்,

“தனக்கு தொடர்ந்து காவல் துறையினர் மிரட்டல் விடுத்து வருகின்றனர்.விசாரணையின் போது காவல்துறை அதிகாரிகள் பாலியல் ரீதியாக துன்புறுத்தியது தொடர்பாக மனித உரிமை ஆணையம், மகளிர் ஆணையம் ஆகியவற்றில் புகார் அனுப்பியுள்ளதாகவும்,அந்த ஆணையங்களிடம் ஆதாரங்களை கொடுக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அடையாளம் தெரியாத எண்களில் இருந்து பலர் தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்து
வருகின்றனர்.தன்னை கடத்தி கற்பழித்து விடுவோம் என மிரட்டல்கள் வருகின்றன எனவும் கூறிய அவர்,தொடர் மிரட்டல்களால் வெளியே நடமாட பயமாக உள்ளதாக தெரிவித்தார்.லண்டனில் படிக்க செலுத்திய 23 லட்ச ரூபாய் பணத்தை காவல் துறையினர் முடக்க முயற்சிப்பதாகவும், இந்த வழக்கை சட்டப்படி நீதிமன்றத்தில் சந்திக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்”.

மேலும் படிக்க