November 26, 2018
தண்டோரா குழு
சென்னையை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் தனது செருப்பை காணவில்லை என காவல் நிலயத்தில் புகார் அளித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை தண்டையார்பேட்டையை சேர்ந்தவர் ராஜேஷ்குப்தா(55) தொழிலதிபரான இவர்,பாரி முனையில் ஹார்டுவேர் கடை நடித்தி வருகிறார்.இவர் ரத்த பரிசோதனை செய்வதற்காக சென்ற போது தனது செருப்பை தொலைத்துள்ளார்.
இது தொடர்பாக தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.புகாரை படித்த போலீசார் அதிர்ச்சியடைந்தனர்.அந்த புகாரில்,இன்று தண்டையார் பேட்டை திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் உள்ள தனியார் சர்க்கரை நோய் பரிசோதனை மையத்திற்கு சென்றேன்.அந்த மையத்தின் வாசலில் என்னுடைய 800 ரூபாய் மதிப்புள்ள செருப்பை கழற்றி வைத்து சென்றேன்.பரிசோதனை முடிந்து வந்து பார்த்தபோது வாசலில் விட்டு சென்ற என்னுடைய செருப்பை காணவில்லை. இரண்டு நாட்களுக்கு முன்தான் அந்த செருப்பை வாங்கினேன்.ஆகையால் எனது செருப்பை திருடியவர்களை கண்டுபிடித்து செருப்பை மீட்டு தர வேண்டும் என புகார் தெரிவித்தார்.
இதையடுத்து,தண்டையார்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.படத்தில் வருவது போல இவர் செருப்பை காணவில்லை என்று புகார் அளித்திருப்பது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.