• Download mobile app
09 Jun 2026, TuesdayEdition - 3772
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தோனி மனைவி மீது பணமோசடி வழக்கு

October 11, 2016 தண்டோரா குழு

இந்திய கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனியின் மனைவி சாக்க்ஷி தோனி மீது டெல்லி போலீசார் பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக மூன்று பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ரிஷ்தி எம்எஸ்டி அல்மோட் (Rhiti MSD Almode Pvt. Ltd) எனும் தனியார் நிறுவனத்தை சாக்க்ஷி தோனி, அருண் பாண்டே, சுபாவதி பாண்டே மற்றும் பிரதிமா பாண்டே ஆகியோர் துவங்கியுள்ளனர்.

இவர்களுடன், 39 சதவிகிதம் முதலீடுடன் ஸ்போர்ட்ஸ் பிட் வேர்ல்ட்( sports fit world)எனும் தனியார் நிறுவனம் பங்குதாரராக சேர்த்துள்ளது. இதற்கிடையில் இவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணாமாக ரிஷ்தி எம்எஸ்டி அல்மோட் நிறுவனம் முழு முதலீடையும் ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஸ்போர்ட்ஸ் பிட் வேர்ல்ட் நிறுவனத்திடம் இருந்து பெற்றுள்ளது.

இந்நிலையில்,முதலீடு பரிமாற்றத்தின் போது இருதரப்பினருக்கும் இடையே போடப்பட்ட ஒப்பந்தத்தின்படி ரிஷ்தி எம்எஸ்டி அல்மோட் நிறுவனம், இந்தாண்டு மார்ச் 31ஆம் தேதிக்குள் அரோராவுக்கு ரூ.11 கோடி கொடுக்கப்பட வேண்டும்.ஆனால், அரோரா தரப்பில் ரூ.2.25 கோடி மட்டுமே பெறப்பட்டதாக கூறப்பட்டுள்ள நிலையில் அந்நிறுவனம் சார்பில் குருகிராம் காவல் நிலையத்தில் ரிஷ்தி எம்எஸ்டி அல்மோட் நிறுவனத்தின் மீது பண மோசடி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.எனினும்,அந்நிறுவனத்தின் பங்குதாரரான அருண் பாண்டேவோ பாதிக்கும் மேற்பட்ட தொகை கொடுத்து விட்டதாக கூறிவருகிறார்.

மேலும், தோனியின் மனைவியான சாக்க்ஷி இந்நிறுவனத்தில் பங்கு தாராராக இருந்து விலகி ஒரு வருடம் ஆன நிலையில் அவருடைய பெயரும் இந்த மோசடி வழக்கில் ஏன் சேர்க்கப்பட்டுள்ளது என்று தெரியவில்லை என கூறியுள்ளார்.

மேலும் படிக்க