• Download mobile app
22 Jun 2026, MondayEdition - 3785
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஜம்மு-காஷ்மீருக்கு ரூ. 1,093 கோடி நிதி: மத்திய அரசு

November 1, 2016 தண்டோரா குழு

பிரதமர் நரேந்திர மோடியின் மறுசீரமைப்பு திட்டத்தின் கீழ் ஜம்மு – காஷ்மீர் மாநிலத்திற்கு முதல் கட்டமாக ரூ.1,093 நிதியை மத்திய நிதியமைச்சகம் வழங்கியுள்ளது.

ஹிஸ்புல் முஜாஹிதீன் இயக்கத்தைச் சேர்ந்த புர்கன் வாணி ஜம்மு காஷ்மீரில் காவல் துறையினரால் கடந்த ஜூலை மாதம் சுட்டுக் கொல்லப்பட்டார். இதனை தொடர்ந்து ஜம்மு காஷ்மீரில் பகுதிகளில் வன்முறைச் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வந்தன.

பொதுமக்கள், வணிகர்கள், பள்ளிக் குழந்தைகள் என யாரும் வெளியே செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. கலவரம் காரணமாக ஊரடங்கு உத்தரவும் பிறபிக்கப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீரில் மீண்டும் இயல்பு நிலைக்குக் கொண்டு வர இராணுவம் மேற்கொண்ட முயற்சியில் வெற்றி கிடைத்துள்ளது.

இந்நிலையில் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் தொடர்ந்து நடந்த கலவரங்கள் மற்றும் பல காரணங்களால் சேதமடைந்த கட்டடங்கள் மற்றும் விவசாய நிலங்களைச் சீரமைக்க மத்திய அரசு முதல் கட்டமாக ரூ.1,093 கோடி ரூபாய் நிதி வழங்கியது.

பிரதமர் மோடியின் மறுசீரமைப்புத் திட்டத்தின் அடிப்படையில் ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தில் சேதமடைந்த பொதுச் சொத்துகளான மருத்துவமனைகள், பள்ளிகள், சமுதாயக் கூடங்கள் ஆகியவற்றைச் சீரமைக்கவும்,மாநிலத்தில் விவசாயத்தைச் சீரான நிலைக்குக் கொண்டு வரவும் ரூ. 2,000 கோடி ஒதுக்கப்பட்டது.இதன் ஒரு பகுதியாக ரூ. 1,093 மத்திய நிதியமைச்சகம் வழங்கியுள்ளது.பிரதமரின் ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தின் மறுசீரமைப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாக மாநிலத்தில் விவசாயத்தை மேம்படுத்த ரூ.500 கோடி தனியாக வழங்கப்பட்டுள்ளது.

மாநிலத்தில் தொடர்ந்து நிலவும் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டுள்ள வணிகர்கள், தொழில் முனைவோர்களுக்கும் உதவும் வகையில் பிரதமரின் மறுசீரமைப்புத் திட்டத்தின் கீழ் நிதி வழங்கப்பட்டுள்ளது என மத்திய அரசின் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

மேலும் படிக்க